இந்நிலையில், நாளை (திங்கட்கிழமை) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என்றும், இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ம் தேதி (புதன்கிழமை) தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
The post நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! appeared first on Dinakaran.