கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கிருஷ்ணகிரி, நவ.26: கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் எஸ்ஐ பிரபாகரன் மற்றும் போலீசார், பாப்பாரப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் வீரப்பன்நகர் 3வது தெருவைச் சேர்ந்த சலீம் (எ) முஸ்தான் (27) என்பது தெரியவந்தது. மேலும், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், 1,300 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சலீமை கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: