ஆக்கிரமிப்பு அகற்றி அரசு நிலத்தில் மயான வசதி

மேட்டூர், நவ.25: மேட்டூர் அருகே விருதாசம்பட்டி செங்கரட்டில் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றி மயான வசதி செய்து கொடுக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அருகே விருத்தாசம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட செங்கரடு பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், மயான வசதியின்றி அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மயான வசதி ஏற்படுத்திக் கொடுக்க கடந்த ஊராட்சி மன்றத் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்று பஞ்சாயத்து தலைவர் பிரபு முன்னிலையில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, அப்பகுதியில் புதிய மயானம் அமைத்துக் கொடுத்தனர். குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில், மயானத்தைச் சுற்றிலும் ஊராட்சி சார்பில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் பஞ்சாயத்து தலைவர் பிரபு தெரிவித்தார். நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மயான வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post ஆக்கிரமிப்பு அகற்றி அரசு நிலத்தில் மயான வசதி appeared first on Dinakaran.

Related Stories: