ஓபேபாளையம் அரசு பள்ளிக்கு விருது

ஓசூர், நவ.25: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த குழந்தைகள் தினவிழாவில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட 3 அரசு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் கேடயம் விருதாக வழங்கப்பட்டது. அதன்படி ஓசூர் கல்வி மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக, சூளகிரி ஒன்றியம் ஊ.ஒதுப்பள்ளி ஓபேபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தமிழ்ச்சி தங்கபாண்டியன் எம்பி., தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் தலைவர் திண்டுக்கல். ஐ. லியோனி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு விருதை வழங்கினர். சூளகிரி வட்டார கல்வி அலுவலர் மாதேஷ், பள்ளி தலைமை ஆசிரியை லட்சுமி, ஆசிரியை மீனா ஆகியோர் கேடயம் மற்றும் விருதை பெற்றுக்கொண்டனர்.

The post ஓபேபாளையம் அரசு பள்ளிக்கு விருது appeared first on Dinakaran.

Related Stories: