நேற்று சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. நேற்று ஒரே நாளில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அவர்களில் 68,241 பேர் முன்பதிவு செய்திருந்தவர்கள். இந்த மண்டல காலத்தில் நேற்று தான் மிக அதிக அளவில் பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். இதனால் பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நெய்யபிஷேகம் செய்வதற்கும் நீண்ட வரிசை காணப்பட்டது. விடுமுறை நாள் என்பதால் இன்றும், நாளையும் பக்தர்கள் வருகை மேலும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
The post சபரிமலையில் கூட்டம் அலைமோதல் ஒரே நாளில் 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.
