கைது செய்யப்பட்ட 21 பேரை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த கிளப்பில் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து இருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். வெளி ஆட்கள் யாருக்கும் அனுமதி இல்லை. இதனை கண்காணிக்க பவுன்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இங்கு ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 20 டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு டேபிளுக்கு 350 ரூபாய் வீதம் விளையாடி உள்ளனர். மொத்தம் அங்கிருந்து 264 டோக்கன் மற்றும் 25 சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பொழுதுபோக்கு என்ற பெயரில் கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் இருந்து சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக அதிக பேர் இங்கு வந்து சென்றதாகவும், லட்சக்கணக்கான பணம் வைத்து அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இச்சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பணம் வைத்து சூதாட்டம் கிளப் உரிமையாளர் உட்பட 21 பேர் கைது: ரூ.34 ஆயிரம் பறிமுதல் appeared first on Dinakaran.