தொடர்ந்து சுங்க அதிகாரிகள் மேப்லீனை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தியதில், துபாயில் இருந்து வந்த பயணி ஒருவர், இந்த தங்கப் பசையை கடத்தி வந்து, டிரான்சிட் பயணிகளுக்கான கழிவறையில் மறைத்து வைத்துவிட்டு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அந்த தங்கப் பசை பார்சலை மேப்லீன் எடுத்துக் கொண்டு வந்து, உள்நாட்டு முனையத்தில் நிற்கும் கடத்தல் பயணியிடம் கொடுக்கக் கொண்டு வந்தார் என்று தெரிய வந்தது. ஆனால் மேப்லீன், சுங்கத்துறையினரிடம் சிக்கிக்கொண்டார் என்று தெரிந்ததும், அந்த கடத்தல் பயணி தப்பி ஓடி விட்டார் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள், சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம், துபாயிலிருந்து தங்க பசையை கடத்தி வந்த பயணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்க பசை பறிமுதல்: தப்பியோடிய ஆசாமிக்கு வலை; விமான நிலைய ஊழியர் கைது appeared first on Dinakaran.