அவர் பேசியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் இது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு, வெறுப்பு மற்றும் மோசமான அவர் எண்ணத்தை காட்டுகிறது. அவர் ஆசைப்படலாம் ஆனால் நான் அவரைப் போன்ற ஒருவருடன் திரையில் நடித்ததில்லை என்பதற்கு திரைத்துறையினருக்கு நன்றி கூறுகிறேன். இனிமேல் அவருடன் நான் நடிக்க மாட்டேன்” என கூறினார். த்ரிஷா இப்படி பதிவு போட்டவுடன் திரைபிரபலன்கள் பலரும் மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.