மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்; 21ம் தேதி தொடக்கம்

 

ஈரோடு, நவ.19: அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் வருகிற 21ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக பள்ளிக்கல்வித்துறை சார்பில், கலைத்திருவிழா போட்டிகள் கடந்தாண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றது. பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த 6 முதல் 8 வகுப்பு வரை 62 மாணவர்களும், 9 மற்றும் 10ம் வகுப்பில் 172 மாணவர்களும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் 192 மாணவர்களும் என மொத்தம் 426 மாணவர்கள் வருகின்ற 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை வேலூர், செங்கல்பட்டு, திருச்சி ஆகிய 3 இடங்களில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு முதல்வரால் கலையரசன், கலையரசி பட்டம் வழங்கப்பட உள்ளது. மேலும் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். மாநில அளவிலான போட்டிகளில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 426 மாணவர்கள் பங்கேற்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்; 21ம் தேதி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: