வ.உ.சிதம்பரனார் நினைவு நாளில் பன்முகப்பட்ட வாழ்வையும் பணிகளையும் போற்றுவோம்: முதல்வர் டிவிட்

சென்னை: வ.உ.சிதம்பரனார் நினைவு நாளையொட்டி அவரது பன்முகப்பட்ட வாழ்வையும் பணிகளையும் போற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ என மகாகவி பாரதி மனம் நொந்து பாடும் அளவுக்குக் கோவைச் சிறையில் கொடுமைக்குள்ளான வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள். தன் இளமை, சொத்து, பாரிஸ்டர் பட்டம் என அனைத்தையும் இழந்து வாழ்நாளெல்லாம் விடுதலைக்காகப் போராடிய தனிப்பெரும் தியாகசீலராம் கப்பலோட்டிய தமிழரை நன்றிப்பெருக்குடன் நினைவுகூர்வோம். அவரது பன்முகப்பட்ட வாழ்வையும் பணிகளையும் போற்றுவோம்.

The post வ.உ.சிதம்பரனார் நினைவு நாளில் பன்முகப்பட்ட வாழ்வையும் பணிகளையும் போற்றுவோம்: முதல்வர் டிவிட் appeared first on Dinakaran.

Related Stories: