ஆனால், இந்த விவரம் கூட தெரியாமல் அவர்கள் (அதிமுக) வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள். கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே பரஸ்பர உணர்வு, தொடர்பு இருப்பது தான் நல்லது. அது தான் நாட்டுக்கும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள், மாலை போட்டு இருக்கிறீர்களா? காவி ஆடை அணிந்து இருக்கிறீர்களே? என்று கேள்வி கேட்டனர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், ‘இதயத்தில் கொடி இருக்கு, சின்னம் இருக்கு. அதை யாராலும் அழிக்க முடியுமா? இருக்க கூடாது என்று யாராவது சொல்ல முடியுமா?’ என்றார்.
The post விவரம் தெரியாமல் அதிமுக வெளிநடப்பு ஓபிஎஸ் கிண்டல் appeared first on Dinakaran.
