இலங்கைக்கு நாடு கடத்தினால் நான் நிச்சயம் கொல்லப்படுவேன். என் குடும்பத்தினர் நெதர்லாந்தில் வசிக்கின்றனர். நான் எஞ்சிய காலத்தை அவர்களுடன் சுதந்திரமாக வசிக்க விரும்புகிறேன். எனவே, என்னை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்குமாறும், நெதர்லாந்து செல்வதற்காக தூதரக அதிகாரிகள் முன் ஆஜராக அனுமதிக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இதேபோல் சிறப்பு முகாமிலுள்ள ஜெயக்குமாரும், தன்னை முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ராபர்ட் பயாசின் மனுவில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை நவ.27க்கும், ஜெயக்குமாரின் மனு மீதான விசாரணையை நவ.21க்கும் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
The post சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க கோரி வழக்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்: ராபர்ட் பயாஸ் தாக்கல் செய்த மனுவில் ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.