இன்று காலை மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேங்கப்பனின் விவசாய நிலத்தில், ஏற்கெனவே இடிதாக்கி எரிந்து கருகி, காய்ந்த நிலையில் இருந்த ஒரு பனைமரம் முறிந்து விழுந்திருந்தது. அதனுடன் அறுந்து விழுந்த மின்கம்பிகள்மீது, நேற்றிரவு மழைக்காக ஒதுங்கியிருந்த 5 பசுமாடுகள்மீது மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக இறந்து கிடப்பதை பார்த்து மாடுகளின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் கண்டிகை துணை மின்நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். வண்டலூரில் உள்ள கால்நடை மருத்துவர் பிரேமா தலைமையில் மருத்து குழுவினர் இறந்து கிடந்த 5 பசுமாடுகளையும் பரிசோதனை செய்து, அப்பகுதியிலேயே புதைத்தனர். இதுகுறித்து காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதபோல கும்மிடிப்பூண்டி அருகே ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோபி என்பவரின் பசுமாடு வழக்கம் போல் அப்பகுதி வயல்வெளியில் மேய்ச்சலுக்கு சென்று கொண்டிருந்தது. அங்கு அறுந்து விழுந்திருந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தது.
The post வண்டலூர் அருகே பனைமரம் முறிந்து மின்கம்பி அறுந்து விழுந்ததில் 5 பசுமாடுகள் பரிதாப பலி appeared first on Dinakaran.