மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நான்கு விசைப்படகையும், 22 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் 22 மீனவர்களும் இன்று இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி 21 மீனவர்களை மட்டுமே விடுதலை செய்ய முடியும் என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும் 2வது முறையாக எல்லை தாண்டி வந்ததாக முருகன் என்ற மீனவருக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.
