இதனிடையே தீபாவளி அன்று சத்யா தனது அறையில் உள்ள சீலிங் பேனில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சத்யா தாய் உமா மகேஸ்வரி வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் கணவர் வினோத், சத்யாவுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. இதையடுத்து வில்லியனூர் போலீசார் கணவர் வினோத்தை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post வில்லியனூரில் பரபரப்பு பெண் காவலர் தற்கொலை வழக்கில் கணவர் கைது appeared first on Dinakaran.