தன்னுடைய வார்டை சேர்ந்த 9 வீட்டினருக்கான மின்கட்டணத்தை சில்லறையாக கொடுத்து மின்வாரிய ஊழியர்களை பழிவாங்க அவர் ஒரு திட்டம் தீட்டினார். இதன்படி 9 வீட்டினரின் மின்கட்டணத்திற்கான பணம் ரூ.7 ஆயிரத்தை வாங்கி அதை அங்குள்ள ஒரு கோயிலில் கொடுத்து ரூ.5, ரூ.2, ரூ.1 என சில்லறையாக மாற்றினார். பின்னர் அதை ஒரு சாக்கில் கட்டி நேராக அங்குள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று கொடுத்தார். 7 ஆயிரம் ரூபாய்க்கு சில்லறையாக கொண்டு வந்ததைப் பார்த்த அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். வார்டு கவுன்சிலர் என்பதால் அதை வாங்காமல் இருக்கவும் முடியாது. வேறு வழியின்றி அந்த அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து பல மணிநேரம் அந்த சில்லறையை எண்ணி சரி பார்த்து அதற்கான ரசீதையும் கொடுத்தனர்.
இதுகுறித்து கவுன்சிலர் ரஞ்சித் கூறியது: இதன் பிறகும் இந்த நிலை தொடர்ந்தால் என்னுடைய வார்டில் உள்ள 450 வீடுகளுக்கான மின் கட்டணத்தையும் இதே போல சில்லறையாக கொண்டு கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post ஒரு நாளைக்கு 20 முறை பவர் கட் மின்கட்டணத்தை சில்லறையாக கொடுத்து பழிவாங்கிய கவுன்சிலர் appeared first on Dinakaran.
