பெரிய நாடுகள் சர்வதேச சட்டத்தை மீறினால், முழு உலகமும் அனைவருக்கும் மிகவும் ஆபத்தானதாகி விடும். எனவே இந்த விஷயத்தில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட கனடா விரும்புகிறது. ஆனால் இந்தியா வியன்னா உடன்படிக்கையை மீறியது. இந்தியாவில் உள்ள 40 க்கும் மேற்பட்ட கனடா அதிகாரிகளை வெளியேற்றியதால் ஏமாற்றம் அடைந்தேன். இது உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு கவலை அளிக்கிறது. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நாங்கள் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாகவும், நேர்மறையாகவும் பணியாற்ற முயற்சித்தோம். நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். அதாவது இந்திய அரசின் தூதர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். இது இப்போது நாம் செய்ய விரும்புவது சண்டை அல்ல. ஆனால் நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி எப்போதும் சட்டத்தின் ஆட்சிக்காக சண்டை செய்வோம்’ என்றார்.
The post நிஜ்ஜார் கொலையில் தொடர்பு இந்தியாவுடன் மோத கனடா விரும்பவில்லை: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு appeared first on Dinakaran.