முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தனது மனைவியுடன் லண்டனின் டவுனிங் தெருவில் வசிக்கும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா ஆகியோரை சந்தித்து, பிரதமர் மோடி சார்பாக தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் அவருக்கு விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டையும், விநாயகர் சிலையையும் வழங்கினார். இதுகுறித்து எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில், ‘இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை தீபாவளியன்று சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. பிரதமர் மோடி அவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியாவும் இங்கிலாந்தும் சமகால உறவுகளை மறுசீரமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு தீபாவளி பரிசாக கோலி கையெழுத்திட்ட ‘பேட்’: வெளியுறவு அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.