இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து கள்ள சாராய பலி எண்ணிக்கை 19ஆக அதிகரித்துள்ளது. கள்ள சாராயம் தயாரிக்கப்பட்ட இடத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள், டிரம்கள், சாராயம் தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், 7 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக்தளம் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கள்ள சாராயத்தை தடுக்க மாநில பாஜ அரசு தவறி விட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
The post அரியானாவில் கள்ள சாராயம் குடித்த 19 பேர் பலி appeared first on Dinakaran.