மேலும் இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த கிருத்திகா (35), வாணியம்பாடி புதூர் பகுதியை சேர்ந்த முகமது பைரோஸ் (45), சித்தூரை சேர்ந்த அஜீத் (25), மற்றும் SETC அரசு பேருந்து ஓட்டுநர் ஏழுமலை ஆகியோர் உயிரிழந்துள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்து குறித்து வாணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் நேரில் ஆய்வு செய்தார்.
The post வாணியம்பாடி அருகே கோரம்!.. தீபாவளிக்கு ஊர் சென்றவர்கள் விபத்தில் சிக்கி 5 பேர் பலி! 25 பேர் காயம்! appeared first on Dinakaran.