பெரம்பலூரில் கூட்டுறவு பட்டாசு விற்பனை: எம்எல்ஏ பிரபாகரன் தொடங்கி வைத்தார்

 

பெரம்பலூர்,நவ.10: பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சார்பில் கூட்டுறவு பட்டாசு விற்பனையை பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் தொடங்கி வைத்தார்.பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் தீயணைப்புத்துறை அலுவலகம் எதிரே, பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சார்பில் கூட்டுறவு பட்டாசு விற்பனை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங் களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன் தலைமை வகித்தார்.

நகராட்சித் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், பெரம்பலூர் ஒன்றிய குழு தலைவர் மீனா அண்ணா துரை முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் சட்ட மன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் கூட்டுறவுத் துறை பொது மேலாளர் பூங்குழலி, பெரம்பலூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி செயலாளர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் கூட்டுறவு பட்டாசு விற்பனை: எம்எல்ஏ பிரபாகரன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: