வெளிமாநில மது விற்றவர் கைது

 

ஈரோடு, நவ. 9: ஈரோடு மாவட்டம் பிசில்வாடி-அருள்வாடி சாலையில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், தாளவாடி போலீசார் நேற்று முன்தினம் அங்கு விரைந்து சென்று வெளிமாநில மதுபானங்களை விற்பனை செய்து வந்த அருள்வாடி பகுதியை சேர்நத் மாதேவ் (50) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 30 வெளிமாநில மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post வெளிமாநில மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: