700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நேற்றுமுன்தினம் இரவு மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி உள்ளதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அவர்களை பார்த்ததும் அரிசி கடத்தல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் சுமார் 700 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றிய ரயில்வே போலீசார், அதனை அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் பதுக்கல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

The post 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: