இந்நிலையில், கடந்த 19.11.2014ம் தேதி வழக்கம்போல குடித்து விட்டு வந்த குமரேசன் தனது மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது, போதை தலைக்கேறியதால் மாரியம்மாளின் தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக சசிரேகா வாதாடினார்.
இந்நிலையில், குமரேசன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதியானதால், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி தீர்ப்பு அளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்கு ரூ.7 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.
The post மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.