மீஞ்சூர் பேரூராட்சியில் சுடுகாட்டு சாலையை எம்எல்ஏ ஆய்வு

பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சியில் சுடுகாட்டு சாலையை துரை சந்திரசேகர் எம்எல்ஏ ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய ராமாரெட்டி பாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டு செல்லும் சாலை மிகவும் குப்பைகள் கொட்டப்பட்டு மக்கள் நடமாட முடியாமல் மிகவும் பழுதடைந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி எம்எல்ஏ வழக்கறிஞர் துரை சந்திரசேகர் நேற்று முன்தினம் மாலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலையில் கொட்டப்பட்ட குப்பைகளை பேரூராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றி பழுதடைந்த சாலையை உடனடியாக சீரமைத்து தருவதாக அவர் உறுதியளித்தார். ஆய்வின்போது மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்குமணி மோகன்ராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் எலிசபெத் ராணி, ஜோஸ்மின், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அலெக்சாண்டர், துப்புரவு மேற்பார்வையாளர் கோபி, முன்னாள் திமுக நகரச் செயலாளர் மோகன்ராஜ், வார்டு கவுன்சிலர்கள் சங்கர், சேகர், அபுபக்கர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.

The post மீஞ்சூர் பேரூராட்சியில் சுடுகாட்டு சாலையை எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: