அப்போது அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்தார் கார்த்திக். அவரிடம் விசாரித்தபோது, போலீசாரை தகாத வார்த்தையால் திட்டியதுடன் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததால், அவர் உளறுவதாக நினைத்து காலையில் விசாரணைக்கு வருமாறு கூறி விட்டு போலீசார் சென்றனர். ஆனால் கார்த்திக் செல்லாததால் போலீசார் அவரது வீட்டுக்கு இன்று காலை சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
வீட்டில் வாளியில்2 நாட்டு வெடிகுண்டுகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து கார்த்திக்கை காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். விசாரணையில், கார்த்திக் மீது கிருஷ்ணகிரி, ரத்தனகிரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடிதடி வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. கார்த்திக்கை கைது செய்து, எதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரித்து வைத்திருந்தார், யாரையாவது கொலை செய்ய சென்னையில் வீடு எடுத்து தங்கியிருந்தாரா? என பல்வேறு கோணங்களில் கார்த்திக்கிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post வில்லிவாக்கத்தில் பரபரப்பு; வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: ரவுடி கைது appeared first on Dinakaran.