அப்போது, லாடக்கரணை என்ற பகுதி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோரப்பள்ளத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் வெகு நேரம் கழித்தப்பின் அந்த வழியாக சென்ற சிலர் பள்ளத்தில் விழுந்த கிடந்த ரேச்சல்ரோக் ஷனாவை மீட்டு உத்திரமேரூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ரேச்சல்ரோக் ஷனா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் ரேச்சல்ரோக் ஷனா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பள்ளத்தில் தவறி விழுந்த பெண் பலி appeared first on Dinakaran.