மொடக்குறிச்சி காந்தி நகரில்கழிவுநீர் வடிகால் அமைக்க பூமி பூஜை

 

மொடக்குறிச்சி, நவ.4: மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சியில் உள்ள காந்திநகர் ஆதிதிராவிடர் காலனியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நிதியின் கீழ் கழிவு நீர் வடிகால் அமைப்பதற்கு ரூ.7.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் யுவரேகா தனசேகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குணசேகரன் கலந்து கொண்டு பூமி பூஜையிட்டு பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிபாக்கியம், திருநாவுக்கரசு பொறியாளர் பர்கத், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கதிர்வேல், மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் தனசேகர், மொடக்குறிச்சி ஒன்றியக்குழு உறுப்பினர் கலைச்செல்வி முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மனோஜ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சதீஷ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post மொடக்குறிச்சி காந்தி நகரில்கழிவுநீர் வடிகால் அமைக்க பூமி பூஜை appeared first on Dinakaran.

Related Stories: