பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவிடத்தை நவீனமுறையில் மறுசீரமைக்கவும், பெரியார் தொடர்பான நினைவு பொருட்கள் கூடுதலாக இடம் பெறுவதற்கும் ரூ.8.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பேரவையில் அறிவித்தார். இதையொட்டி சிறப்பு செய்யும் விதமாக, வைக்கத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவகத்தில் ரூ.8.14 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் புனரமைப்பு பணிகள் மற்றும் புதிய நூலகம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டேன். இந்த பணிகளை குறித்த காலத்தில் விரைந்தும், தரமாகவும் கட்டி முடிக்க பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
The post கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவகம் ரூ.8.14 கோடியில் புனரமைப்பு, புதிய நூலகம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.