எழும்பூர் தில்லையாடி வள்ளியம்மை பட்டு மாளிகையில் உள்ள கோ-ஆப்டெக்ஸில் ஏராளமான புதிய ரகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக லுங்கி, வேஷ்டிகள், ஆர்கானிக் ஆயத்த ஆடைகள், ஏற்றுமதி ரகம் மற்றும் கைத்தறி துணைப் பொருட்கள் என தனித்தனியே விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கென ஆயத்த ஆடைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாதாந்திர சேமிப்பு திட்டம் மூலம் பொதுமக்கள் தங்கள் வசதிற்கேற்ப ரூ.300 முதல் ரூ.3000 வரை 11 மாத சந்தா செலுத்தினால், 12வது மாத சந்தாவை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தும். ஆன்லைன் மூலம் மாதாந்திர தவணையை செலுத்தலாம். www.cooptex.gov.in என்ற இளையதள முகவரி மூலம் ஆன்லைன் விற்பனை செய்யப்படுகிறது.
The post கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை appeared first on Dinakaran.