சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும்: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம்

சென்னை: சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது. கட்சி வளர்ச்சிக்கு விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில் பழைய விதிப்படி சசிகலா வழக்கு தொடர முடியாது என்று அதிமுக கூறியுள்ளது. தன்னை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிராகரிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும்: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் appeared first on Dinakaran.

Related Stories: