ஆனைமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், நடைபெற்றது.ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைசெல்வி கலந்து கொண்டு, முகாமை துவக்கி வைத்தார். வட்டார வள மைய அலுவலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், புதுப்பித்தல் உள்ளிட்டவைக்கான விண்ணப்பம் பெறப்பட்டது.மேலும், செவித்திறன் குறைபாடு உள்ளோர், கண் பார்வை குறைபாடுயுடையோர்,அறிவுசார் குறைபாடு உடையோர் என மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு, உரிய சிகிச்சை பெற்றனர். நகர்மன்ற தலைவர் துவக்கி வைத்தார்

The post ஆனைமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: