சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவைக் குழுவில் முறைப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், ஆளுநர் அதில் கையெழுத்திட மறுப்பது சுதந்திர போராட்ட தியாகிகளை அவமதிக்கும் செயலாகும். இந்திய சுதந்திரத்திற்காக, விவசாயிகளுக்காக, அடித்தட்டு ஏழை மக்களுக்காக, தீண்டாமை கொடுமைக்கு எதிராக என தன் வாழ்நாள் முழுவதையுமே போராட்டம் நடத்தியும் சிறைக்கு சென்றும் கழித்த தோழர் சங்கரய்யாவின் தியாகத்தை போற்றும் வகையில் அவருக்கு கவுரவ பட்டம் வழங்கும் கோப்பில் உடனடியாக கையெழுத்திடுமாறு ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
The post சுதந்திர போராட்ட தியாகிகளை அவமதிக்கிறார் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க கையெழுத்திட வேண்டும்: கவர்னருக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.