உச்சநீதிமன்ற உத்தரவை ஒரு மாநில அரசு மதிக்காமல் நடப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாக செயல்படுகிறது. ஜூன் முதல் இதுவரை கர்நாடகா 54 டிஎம்சி மட்டுமே தந்துள்ளது. 83.6 டிஎம்சி பற்றாக்குறை உள்ளது. ஒழுங்காற்று குழுவிடம் 13,000 கன அடி கேட்டோம். அவர்கள் 2,600 கன அடி பரிந்துரைத்துள்ளார்கள். ஆளுநரின் அரசியல் விளையாட்டை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது சரியல்ல. காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசு எதிரி போல் நடந்து கொள்வதாகவும், வரும் 3-ஆம் தேதி கூட உள்ள காவிரி மேலாண்மை குழு கூட்டத்தில் 16 ஆயிரம் கன அடி தண்ணீர் தர வலியுறுத்தப்படுமென்றும், இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது” என்றார்.
The post காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.
