இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், திரும்பி அந்த நபரை தாக்க முயன்றார். உடனே அந்த நபர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு வந்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது, சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர் தப்பியோடி விட்டதால், இந்த பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என பாஜவைச் சேர்ந்தவர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அப்பெண்ணும் போலீசில் புகார் தெரிவிக்காமல், அங்கிருந்து சென்று விட்டார். அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பெண்ணிடம், அக்கட்சியைச் சேர்ந்தவரே சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ராசிபுரம் அருகே பரபரப்பு அண்ணாமலை நடைபயணத்தில் வந்த பெண்ணிடம் சில்மிஷம் appeared first on Dinakaran.