தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகளில் சென்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்து வருவது வழக்கம். இதனிடையே அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்கின்றனர். இதேபோல் இலங்கை கடற்கொள்ளையர்களும் மீனவர்களை தாக்கி அவர்களது மீன்கள் மற்றும் வலைகளை பறித்து சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 23 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்தனர். இதனிடையே, இன்று மீண்டும் 14 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படை கைது செய்த 37 மீனவர்கள் மற்றும் 5 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலிவுறுத்தியுள்ளனர்.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 14 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு! appeared first on Dinakaran.
