அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆபரேசன் தியேட்டரில் நோயாளியுடன் படம் எடுத்து, இணையத்தில் வெளியீடு தற்காலிக பணியாளர் பணி நீக்கம்: கோட்டாட்சியர் உத்தரவு

அரியலூர்: அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆபரேசன் அறையில் அரைகுறை ஆடையுடன் படுத்திருந்த நோயாளியுடன் செல்போனில் படம் எடுத்து, அதனை இணையத்தில் வெளியிட்ட தற்காலிக பணியாளரை பணி நீக்கம் செய்து கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் நேற்று உத்தரவிட்டார். அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள ஆபரேசன் அறையில், அறைகுறை ஆடையுடன் படுத்திருந்த நோயாளியுடன், கையில் கத்தரிக்கோல் வைத்துக்கொண்டு ஒரு மருத்துவர், 2 செவிலியர்கள் இருப்பது போன்று படம் முகநூல், கட்ச்செவி உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

The post அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆபரேசன் தியேட்டரில் நோயாளியுடன் படம் எடுத்து, இணையத்தில் வெளியீடு தற்காலிக பணியாளர் பணி நீக்கம்: கோட்டாட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: