*திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று மாலை 05:30 மணிக்கு நடை அடைக்கப்படும்
*அக்டோபர் 29 நள்ளிரவு 1:05 மணி முதல் 2:23 மணி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைக்கப்படும்.
*திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று இரவு 07 மணி முதல் அதிகாலை 3:15 வரை நடை அடைக்கப்படும் .
*அழகர்கோயில் மற்றும் இக்கோயிலின் உபகோயில்களில் மாலை 6 மணிக்குள் அனைத்து பூஜைகளும் நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும்.
*திருப்பரங்குன்றம் முருகன் கோவில் இன்று இரவு 7 மணி முதல் நடைசாத்தப்படுகிறது. 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு
*பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து உபகோவில்களிலும் இரவு 8 மணிக்கு அர்த்தசாம பூஜை செய்து நடை சாத்தப்படும். 29ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும்.
*சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி தினமான இன்று மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும்
*அதே நேரத்தில் கிரகண நேரங்களில் திருநள்ளாறு சனிபகவான் ஆலயம், காளஹஸ்தி, ராகு கேது தலங்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
The post சந்திர கிரகணம் இன்று நிகழ இருப்பதால் திருப்பதி, ஸ்ரீரங்கம், மீனாட்சி அம்மன் உள்ளிட்ட கோயில்களில் நடை அடைப்பு!! appeared first on Dinakaran.