செட்டிகுளம் அரசு பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் மணிவண்ணன் தலைமை வகித்தார். தனியார் கல்லூரி கணிதவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் திலகவதி, தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் ஏகவள்ளி மற்றும் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் கோமதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 12-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும், உயர்கல்வியில் பிளஸ் 2 மாணவர்கள் எந்த மாதிரியான பாடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்தும், போட்டித் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தனர். மேலும், மாணவர்களுக்கு சிறு,சிறு விளையாட்டுகளை நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

 

The post செட்டிகுளம் அரசு பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: