பொங்கல் விழா

மானாமதுரை: மானாமதுரை ஒன்றியம் வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் மருதுபாண்டியர் நினைவாக பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் அமைந்திருக்கும் மாமன்னர் மருதுபாண்டியர்களின் உருவ சிலைக்கு மாலை துண்டி, வேட்டி அணிவித்து பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் அகமுடையார் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நெல்லை குமார், அவைத்தலைவர் தூதை ராஜா, தென்மண்டல தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் ஞானசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பொங்கல் விழா appeared first on Dinakaran.

Related Stories: