கலைஞர் குறித்து அவதூறு பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது

சேலம்: சேலம் தாதகாப்பட்டி திருஞானம் முதல்தெருவை சேர்ந்தவர் குமரேசன்(49). நாம் தமிழர் கட்சியின் தெற்கு தொகுதி மாவட்ட முன்னாள் துணைத்தலைவர். இவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து, சமூக வலைதலங்களில் அவதூறான தகவல்களை வெளியிட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கலைஞர் குறித்து அவதூறு பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Related Stories: