நேபாளத்தில் கார் கவிழ்ந்து 12 இந்தியர்கள் படுகாயம்

காத்மாண்டு: நேபாள நாட்டில் பீர்கஞ்ச் பகுதியிலிருந்து காத்மாண்டு நோக்கி விஜயதசமி சாமி தரிசனத்துக்கு வந்த யாத்திரீகர்களை ஏற்றிக்கொண்டு ஒரு கார் சென்றது. மகவான்பூர் மாவட்டம், மாதாதீர்த்த ஏரியாவில் உள்ள இந்திரசரோவர் அருகே வரும்போது அந்த கார் ஒரு திருப்பத்தில் எதிர்பாராமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இந்தியாவை சேர்ந்த பக்தர்களான 3 மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட காத்மாண்டு போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து கார் டிரைவர் அனில்குமார் ஷாவை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

The post நேபாளத்தில் கார் கவிழ்ந்து 12 இந்தியர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: