திருவள்ளூர் மாநாட்டுக்கு முதல்வர் வருகை திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை

 

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த ஐசிஎம்ஆர் அருகே திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பயிற்சி பாசறை மண்டல மாநாடு அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின சிறப்புரை ஆற்ற உள்ளார். இந்த மாநாட்டிற்கான முன் ஏற்பாடு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ஆர்.காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிடபக்தன், மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆதிசேசன், நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், நகர, ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கூளூர் ராஜேந்திரன், ரமேஷ், மகாலிங்கம், அரிகிருஷ்ணன்,

பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதாம், சிட்டிபாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிரண், துணை அமைப்பாளர்கள் மோதிலால், சுகுமார், பாபு, புவனேஷ்குமார், திலீபன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் வழக்கறிஞர் நாகராஜ், களம்பாக்கம் பன்னீர்செல்வம், நேதாஜி, நகர அவைத் தலைவர் கமலக்கண்ணன், சீனிவாசன், ஆகியோர் உடன் இருந்தனர்.

The post திருவள்ளூர் மாநாட்டுக்கு முதல்வர் வருகை திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: