தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவர், மாணவ தலைவர், சிறந்த பொதுவுடமை சிந்தனையாளர், சங்கரய்யாவின் ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதற்கான கோப்பில் ைகயொப்பம் இட கவர்னர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளார். சுதந்திரத்துக்காக பாடுபட்ட உன்னத தலைவரை ஆளுநர் அவமதித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது. ஆளுநர் தமது சித்தாந்த சிந்தனையை கடந்து மக்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post சுதந்திர போராட்ட தலைவர் சங்கரய்யாவை ஆளுநர் அவமதிப்பதா?..ஜவாஹிருல்லா கண்டனம் appeared first on Dinakaran.