இருவரும், வாட்ஸ் அப், முகநூல் மூலம் பேசி பழகி வந்துள்ளனர். அவர்களின் நட்பு பிறகு காதலாக மாறி கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதலனை சந்திக்க நாகஜோதி அடிக்கடி சென்னைக்கு வந்து சென்றுள்ளார். அப்போது, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 27.7.2023 அன்று நாகஜோதியை தொடர்பு கொண்ட கிருஷ்ணன் எனது குடும்பத்தினர் எனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடத்தி விட்டதாகவும், 4.8.2023ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த நாகஜோதி மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்தவர் கிருஷ்ணனை குறித்து விசாரித்துள்ளார். இதில், திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்று கூறியது அனைத்தும் பொய் என தெரிய வந்தது. இது குறித்து, நாகஜோதி தொலைபேசியில் கேட்டபோது உன்னை திருமணம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை என கிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்நிலையில், நேற்று திருத்தணிக்கு வந்த நாகஜோதி, பேருந்து நிலையத்தில் கிருஷ்ணனை சந்தித்து திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்தி உள்ளார். அப்போது, கிருஷ்ணன் ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, நாகஜோதி திருத்தணி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். உதவி காவல் ஆய்வாளர் ராக்கிகுமாரி வழக்கு பதிவு செய்து, கிருஷ்ணனை விசாரணை நடத்தியதில் உண்மை தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
The post மலேசிய பெண்ணுடன் உல்லாசம் திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது appeared first on Dinakaran.