பட்டி தொட்டியெங்கும் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தியவர் பங்காரு அடிகளார். பெண்களுக்கு சமூக நீதியை, சம உரிமையை வழங்கியவர் பங்காரு அடிகளார். ஆன்மிக பணி மட்டுமல்லாமல், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தியவர். பங்காரு அடிகளாரின் சேவையை பாராட்டி, மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. தமிழகத்தில் ஆன்மீகத்தை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியவர். பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஆன்மீகவாதி. அம்மாவின் அறிவு முழு இந்தியாவிற்கே உதவியது.
அம்மாவின் மறைவுக்கு பாஜக தேசிய தலைவர் நட்டா இரங்கல் தெரிவித்துள்ளார், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இன்றும் நாளையும் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழகத்தில் ஆன்மீகத்தை வளர்ப்பதில் பெரும் பங்காற்றியவர் பங்காரு அடிகளார்: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.