சிக்கிமில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 பேர் பலி..!!

சிக்கிம் மாநிலத்தில் இம் மாதத் தொடக்கத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து டீஸ்டா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 75 பேர் காணாமல் போயுள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் இருந்து நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 19 நிவாரண முகாம்களில் சுமார் இரண்டாயிரம் பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கால் துண்டிக்கப்பட்ட சாலைகள், பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றனர்.

The post சிக்கிமில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: