கூடுதல் கட்டிடம் கட்டித்தர கோரி மாணவர்களின் பெற்றோர் ஊர்வலம்

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிட வசதி செய்து தர வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர்கள் ஊர்வலமாக சென்று கோரிக்கை மனு கொடுத்தனர். திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் வாசலில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக அம்மாச்சத்திரம் வரை சென்று திருபுவனம் கடை தெருவில் முடிவடைந்தது. இதில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், முன்னாள் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்ட திருபுவனம் சமூகநல அமைப்புகளின் கூட்டுகுழு சார்பில் கோரிக்கை முழக்க பேரணி நடைபெற்றது.

The post கூடுதல் கட்டிடம் கட்டித்தர கோரி மாணவர்களின் பெற்றோர் ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: