மேலும், 2021-22ம் நிதியாண்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அன்பு நகர் சாலையை பேவர் பிளாக் சாலையாக அமைக்கும் பணியை பார்வையிட்டு, பகுதி பணிகள் முடிக்கப்பட்டு பெறப்பட்ட மான்யம் செலவிடப்பட்டதை உறுதி செய்து மீதம் உள்ள பணிகளை அம்ருத் 2.0 திட்ட குடிநீர் விநியோகப் பணிகளுக்கான பகிர்மான குழாய் பதிக்கப்பட்டதும் சாலைப் பணிகள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் தற்போது ஜாகுவார் சிட்டி பகுதியில் நடந்து வரும் பகிர்மானக் குழாய் பதித்தல் பணிகளை பார்வையிட்டு மண் அகழ்தல் பணிகள் செய்யும்போது தேவையான குழாய்களை பணியிடத்தில் இருப்பு வைத்துக் கொண்டு உடனுக்குடன் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு இல்லாமல் பணிகள் செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார்.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நில அளவை எண்.242/1, திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைத்தல் பணி ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வருவதை பார்வையிட்டு மயான வளாகத்தில் சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் மரக்கன்றுகளை நட்டு பசுமை வளையம் ஏற்படுத்தவும், அருகில் உள்ள நிறுவனங்கள், குடியிருப்புகளில் பார்வையை மறைக்கும் வண்ணம் உயர் வளர்ச்சி கொண்ட மரங்களை நடுமாறு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் (பொறுப்பு) லதா, செயல் அலுவலர் வெங்கடேஷ், உதவி பொறியாளர் சுபாஷினி, பணி மேற்பார்வையாளர் மதியழகன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
The post திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் திருமழிசையில் பேரூராட்சிகளின் இயக்குநர் கிரன் குராலா ஆய்வு appeared first on Dinakaran.