முதல் நாளான இன்று, ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடனும் 2ம் நாளான நாளை 4 மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆய்வு கூட்டத்தில் சென்னை மாநகராட்சி தவிர்த்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நல திட்டங்கள், சிறப்பு திட்டங்கள் ஆகியவற்றில் கடந்த 2 ஆண்டுகால முன்னேற்றங்கள், திட்டங்களின் நிலை குறித்த விரிவான அறிக்கையை தயாராக வைத்திருக்கும்படி, தமிழ்நாடு அரசு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
The post மறைமலைநகர் விரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. சென்னை புறநகர் பகுதிகளில் முக்கிய ஆய்வு : மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்பு!! appeared first on Dinakaran.